படம்: நூறாவது நாள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
பெ: ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
...
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
பெ: ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
ஆ: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
பெ: ஆங்..
ஆ: கோடி.. பெ:
ஆ: மின்னல்.. பெ:
ஆ: ஓடி.. பெ:
ஆ: வந்து பாவை ஆனது
இவள் ரதியினம்.. உடல் மலர்வனம்
இதழ் மரகதம்.. அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்.. இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ.. ப்ரம்ம தேவனே
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ஆ: பாபா பாபா..
பெ: நாநா நாநா..
...
பெ: காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
ஆ: ஆஹாங்..
பெ: காதல்.. ஆ:
பெ: தேவன்.. ஆ:
பெ: உந்தன்.. ஆ:
பெ: கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஆ: ஓஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
#29 விழியிலே மணி விழியில் - நூறாவது நாள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
5/05/2009 06:56:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
Subscribe to:
Posts (Atom)