#34 பூப்பூத்ததை யார் பார்த்தது - கதாநாயகன்

படம்: கதாநாயகன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்தபோது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகைப் போன்றது
அன்பு என்பது விளக்கைப் போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...

பறவை போலப் பரந்த வானில் பறந்து செல்கிறோம்
பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மைப் பிரிப்பதில்லை, கூடிக் கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்
மழையில் காய்கிறோம்.. வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...