படம்: இதய தாமரை
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
ஆ: பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லையா
பெ: இதயத்தின் தாமரையில் இருப்பது நீயா
தாமரைக்குள் வீடு கட்டித் தந்தவள் நானில்லையா
ஆ: ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
பெ: உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஆ: ஒன்றானது
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஆ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
பெ: கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
பெ: யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
ஆ: பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
பெ: கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆ: ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
பெ: இயல்பானது
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பெ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
ஆ: கள்ளூறும் காலை வேளையில்
பெ: லல லால லாலலா லாலல லாலா
லல லால லாலலா லாலல லாலா
...
# 35 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் - இதய தாமரை
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
11/20/2009 11:29:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சங்கர்-கணேஷ்,
சித்ரா
Subscribe to:
Posts (Atom)