# 103 Senorita I love you - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
...

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஏஹேஹே.. ஹாஹாஹாஹா..
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல.. ஆரம்பம் இன்றல்ல
ஏஹேஹே.. எங்கெங்கோ செல்லுதே.. என் நெஞ்சைக் கிள்ளுதே
அங்கே.. அங்கங்கே.. வாவென்னும் அங்கங்கள்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
...

பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஹாஹாஹா.. ஹேஹேஹேஹே..
பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்.. துள்ளாதோ உள்ளங்கள்
ஏஹேஹே.. வானெங்கும் ஊர்வலம்.. வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம்.. கலந்தால் இனிக்கும்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
பபாபாபா.. லலாலாலா.. எஹேஹேஹே.. ஜுருருரு..
...

# 102 ஒரு இனிய மனது - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா.. லாலா லால லாலா..
லாலா லாலா லல லாலா.. லாலா லாலா லல லாலா..
லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா..
...

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

ஜீவனானது இசை நாதமென்பது.. முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசையென்றானது
ஆஹா.. ஆஹாஹா.. எண்ணத்தில் ராகத்தின் மென் ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இழைந்தோடுது.. இசை பாடுது

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

மீட்டும் எண்ணமே.. சுவையூட்டும் வண்ணமே.. மலர்ந்த கோலமே
ராக பாவமே.. அதில் சேர்ந்த தாளமே.. மனதின் தாபமே
ஆஹா.. ஆஹாஹா.. பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள்.. உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

# 101 என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி

No.. No.. No.. No..
...
ம்ஹும்.. Just Listen..
...
என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
...

நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..

என் வானிலே ஒரே வெண்ணிலா
...

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
...

# 100 காற்றில் எந்தன் கீதம் - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

# 99 ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...

வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...

தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
...