#117 குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...

இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையில் உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோகனம் பாடிடும் பெண்மை.. அதைச் சொல்லடி

குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...

பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ.. நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல.. அங்கம் எங்கும் துள்ளத் துள்ள
அள்ளிக் கொள்ள.. என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி

குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...

என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ.. எவரோ.. யார் கண்டது
குயிலே.. தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன் மலர் வாடுது இன்று.. நீ சொல்லடி

குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...