#275 உன்னை எதிர்பார்த்தேன் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா & குழுவினர்



பெ: ஓ ஓ ஓஓ.. ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓஓஓ..
...
பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
பெ: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
பெ: மன்னவா மன்னவா மன்னவா
பெ.குழு: ம்ம்ம் ம்..
பெ: என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
பெ.குழு: ம்ம்ம் ம்..
பெ: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

பெ.குழு: ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம்.. ம் ம்..
ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம்..
...

பெ: தேரோடும் வீதி தேவன் உந்தன்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
பெ: தேரோடக் கண்டவுடன் துள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெ: பூவாடும் சோலை மன்னன் உந்தன்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
பெ: தோள் மீது ஆட இன்பம் கொள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெ: பொய்கையெல்லாம் உன்னையெண்ணிக் கண்மயங்கி நின்றதென்னவோ
காதல் மணிமண்டபங்கள் உன் நினைவைத் தந்ததென்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்..
பெ: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..

பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்.. ம்ம்ம்..
...
: வேய்ங்குழல் போலே கானம் ஒன்று..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
: காற்றோடு வந்ததென்ன நங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
: ஓசையின் வழியே உள்ளம் செல்ல
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
: உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
: வான்மதியின் வெள்ளியலை வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும் வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்..
: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..

: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
: முல்லையே முல்லையே முல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்..
: நீ இல்லையேல் இன்பமே இல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்..
: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

#274 முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்



பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ.. ஓஓஓஓ ஓஓஓஓ..
ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
ஓஹோ.. இன்ப நாதச் சங்கொலிகள் ஏற்பீரோ
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
...

: பூவின் மீது தென்றல் வந்து மோதுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மோக ராகம் நெஞ்சில் வந்து பாடுதே
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: இதுதானே இறைவன் வகுத்த பாதையே
உனைத்தானே சரணம் புகுந்த பாவையே
: இயல் இசைப் பெண்ணாக வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: எனை தினம் கொண்டாட வந்தாய்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: இளங்கனி உன் மார்பில் சேர
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வளம் இனி நம்மோடு வாழ்க
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: அலமேலு மங்கை.. நலங்காணும் நங்கை
உனையாளும் தேவன் அருகிலே

: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
பெ: ஆ.. ஆஹா ஆஆஆ.. ஆஹா.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆ..
...
பெ.குழு: தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
தொம்ததொம் தொம்.. தொம்ததொம் தொம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...
பெ.குழு: ம் ம்ம்ம்ம்ம்..
...

பெ: காலகாலம் கண்கள் காணாக் காட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
பெ: காதல் தேவன் வந்தான் இங்கே சாட்சியில்
பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்..
: மண்ணில் வானம் பந்தல் போலத் தோணுதே
விண்ணின் மீன்கள் கண்கள் சிமிட்டிக் காணுதே
பெ: எங்கும் எங்கும் ஓங்கார நாதம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: வந்து வந்து நல்லாசி கூறும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: பொங்கும் பொங்கும் இன்பங்கள் எங்கும்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
: தங்கும் தங்கும் அன்பென்னும் செல்வம்
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்..
பெ: நலம் சூழ வந்த திருமேனி மங்கை
குலம் வாழ இனிதாய் வளர்கவே

பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆ.. ஆ.. தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
பெ: ஆ.. ஆ.. எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: எங்கோ வளர்ந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
: இங்கே கலந்ததே
பெ.குழு: ம்ம் ம்ம்..
பெ: முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
: ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
பெ.குழு: ஓஹோ.. அந்தக் காமன் வாழ்த்தொலிகள் கேட்பீரோ
...

#273 ஒத்தயில நின்னதென்ன - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா



ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
ம்கும்கும்..ம்..
ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழித்துணைக்கு நானும் வரவா
உங்க வாய்த்துணைக்குப் பேச்சுத் தரவா
இந்தக் கன்னிப் பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப் போடுங்க
ஒத்தயில நின்னதென்hahன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
...

சாலையில ஆடுது சாமி வச்ச பூமரம்
உம் பேரத்தான் பாடுது அம்மன் கோயில் கோபுரம்
வானம் பார்த்து நிக்காமலே வளர்ந்த பயிரு யாராலய்யா
வாய்க்கா நீரு வத்தாமலே ஓடி வருது உன்னாலய்யா
இங்கு எல்லாமே நீதானய்யா.. நீ இல்லாம ஊரேதய்யா
ஒத்தயில நின்னதென்hahன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
...

ஏறெடுத்து பார்த்துட்டா ஏவல் செய்ய ஆள் வரும்
கண்ணசைச்சுக் காட்டிட்டா கையக் கட்டி ஊர் வரும்
உங்க பக்கம் நானும் வர என்ன தவம் செஞ்சேனய்யா
ஒட்டுறவா நானிருப்பேன்.. இட்ட பணி செய்வேனய்யா
உந்தன் துணையாக நானில்லையா.. இனி தனியாக நீயில்லைய்யா

ஒத்தயில நின்னதென்னhah என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழித்துணைக்கு நானும் வரவா
உங்க வாய்த்துணைக்குப் பேச்சுத் தரவா
இந்தக் கன்னிப் பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப் போடுங்க
ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
...

#272 திருமகள் உன் முகம் காண வேண்டும் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்: அருண்மொழி



திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலம் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலன் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
ஆஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
...

ஒரு துன்பம் நெருங்காமல் ஓட
வரும் இன்பம் நற்செல்வங்கள் கூட
ஒரு துன்பம் நெருங்காமல் ஓட
வரும் இன்பம் நற்செல்வங்கள் கூட

திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலன் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
கம தநிஸ நிதம தநிஸ
...

#271 பூந்தென்றல் போகும் பாதை - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா


பூந்தென்றல்.. ஆஹஹா.. ஆஹஹா ஆஹஹா..
...
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்..
...

சிறு சிறு மலைகளில் விழுகின்ற அருவிகள் இசையென ஒலிக்கிறது
அது சுரங்களைப் பிரிக்கிறது.. ஸரிகம சுரங்களைப் பிரிக்கிறது
சந்தன மரங்களில் தழுவிய காற்றினில் இலைகளும் அசைகிறது
அது தாளத்தில் இருக்கிறது.. தகதிமி தாளத்தில் இருக்கிறது
பச்சை மலை எங்கும் இந்தப் பாடல் கேட்டு
பஞ்சவர்ணப் பூக்கள் கூட ஆடுதே
இந்த இயற்கை அன்னை சீதனம்.. அது இசையால் ஆனது
இதை யாரும் இங்கு கேட்கலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
...

ஆஆ.. ஆஆஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஹா..
ஆஆ.. ஆஆஆஆஆஆ ஆஆ..
கனி விட்ட மரங்களில் இளஞ்சிட்டுக் குருவிகள் கூடுகள் புனைகிறது
ஒரு குடும்பமும் வளர்கிறது.. பல பல சுகங்களும் மலர்கிறது
இயற்கையின் அழகினில் இளமையும் இனிமையும் இணைவது ஓரழகு
அதில் இணைந்தது என் மனது.. தினம் தினம் விளைந்தது புது உறவு
வானவில்லின் ஜாலம் கண்டு மோகம் கூடும்
எண்ணமெங்கும் ஜாடை சொல்லிப் பாடுமே
இங்கு கொஞ்சும் இன்பமாயிரம்.. மனம் போலே ஆடலாம்
தினம் சொர்க்கம் இங்கு காணலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்.. ஹேஏ ஏஏ ஏஏ ஏஏ ஏ..
...

#270 காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: குயில் கூவத் துயில் பறந்து குயிலொன்று எழுந்து வந்து
பயிலாத பாடமொன்றை பயிலச் சொல்லிச் சென்றதம்மா
வயதாக வயதாக இது படியாது.. பயிலாது
கயல் கொண்ட விழியாளே.. இங்கு இயலோடு இசையாக..
காலங்காத்தாலே ஒரு பாடங்கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: என்ன பாடம்.. அது என்ன பாடம்
: காதல் பாடம்.. அது காதல் பாடம்
பெ: ஓஹோஹோஹோ.. காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: எப்போ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஓஹோஹோஹோ..
...

பெ: தாவணியைப் போட்டால் போதும்.. கனவுகள்தான் பின்னால் சுற்றும்
தனியாகப் போனால் போதும்.. நினைவுகள்தான் தன்னால் சுற்றும்
பேசாமல் இருக்கும் நிலவைப் பெண்ணுக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபந்தான்.. வேலையைப் பார்.. சீக்கிரம் சீக்கிரம்

பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: ஓஹோஹோஹோ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஆஹாஹாஹா
...

&பெ: லாலலாலலாலா.. லாலலாலலா.. லாலலாலலாலா.. லாலலாலலா..
லாலலாலா.. லாலலாலா.. லாலலாலலா..
...

: வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் பாடும் பாடல் போலேதான் ஆகும் ஆகும்
தனியாகச் சொல்லும் பாடம்.. இதுதானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்.. அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபந்தான்.. சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி

: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
: காதல் பாடம்.. சொல் காதல் பாடம்
பெ: ம்ஹும் ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும் ம்ஹும்..
...

#269 எம்மனசப் பறிகொடுத்து - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்


எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
...
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து..
...

சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே ஒரு கோடி இன்பம் வைத்தான்
அழகே.. அருகே வரலாமா
அட வந்தால் என்ன பக்கம்.. இனிமேலும் என்ன வெட்கம்
உன் கூந்தல்தன்னில் ஊஞ்சல் கட்டிச் சாய்ந்தாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
மலரோடு தென்றல் வந்து விளையாடிச் செல்லும்போது
மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா
இளமை இனிமை சுவைத்தேனே.. இனிமேல் தினமும் சுகம்தானே
கதை சொல்வேனடி மானே.. உனைக் கொண்டாடுவேன் நானே
நீ சொல்லித் தந்த பாடமெல்லாம் நான் பாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

#268 தேனே.. செந்தேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ம்ஹுஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹு..
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

ஆசையில் ஆடினேன்.. துணை தேடினேன் என் வாழ்விலே.. ஹோய்
ஆனந்தம் பாடினேன்.. மலர் சூடினேன்.. பொன் மாலையில்
ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை ஊடல் நாடகம்
அழகிலே தோன்றும் வண்ணக் காதல் காவியம்
தேவி உன் கோவில் தேடி தீபம் ஏற்றினேன்
பூஜை காணவே..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

வானவில் ஊஞ்சலில் இளஞ்ஜோடிகள் பண்பாடுது.. ஹா..
மௌனமே ராகமாய்.. சுகம் கோடியே கொண்டாடுது
வாசனை மோகம் தந்த தேகம் போதை ஊட்டுது
பூச்சரம் போலே வந்த வேகம் எல்லை மீறுது
ராணி எந்தன் காதல் ராணி.. ihikhik பட்டம் சூட்டவா
என்னை ஆள வா..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

#267 செல்லக் குழந்தைகளே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & மாதுரி


பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
...

பெ1: காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்.. இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்.. தலைகீழாய் நின்றான்
பெ2: தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான்
இவன் பார்த்தால் போதும்.. கடல் பாலாய் மாறும்
பெ1: இனி நம் வீட்டிலே தினம் தீபாவளி
பெ2: இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
பெ1&பெ2: அலை நான்கு விளையாடும் கவி பாடி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

பெ2: ஜன்னல் திறந்தொரு மின்னல் நுழைந்தது என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு.. இது தேவன் வீடு
பெ1: உண்மை நிலவையும் பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்.. இனி எங்கள் அண்ணன்
பெ2: அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
பெ1: இனி நாம் தூங்கவே வெகு நாளாகுமே
பெ1&பெ2: நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ1: பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

#266 பூவாடைக் காற்றே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், இளையராஜா & குழுவினர்


பெ.குழு: தா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா..
தகதக தகதக தகதக தகதகதா..
...
ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே.. உடைகளாகுங்களே
ஓடும் மேகங்களே.. சொல்லுங்களே
உடைகளாகுங்களே.. நில்லுங்களே
வசந்தமெங்கள் வாழ்விலே
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை.. அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை.. யாரும் இல்லை
அள்ளக் கைகள் இல்லை.. நேரம் இல்லை
குழந்தை செய்த சாதனை
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

#265 நீலக்குயிலே சோலைக் குயிலே - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா


: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

பெ: பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி.. பாடாது போனால் வாழாது ஜீவன்
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி.. வாராது போனால் தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட.. தாளாமல் நீயும் கண் மூட
: தாராததெல்லாம் தந்தாக வேண்டும்.. என் அன்னை இப்போது நீதானம்மா

பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

: பூபாளம் பாடும் என் பூந்தென்றலே.. இளநெஞ்சைத் தூண்டும்.. இசை பாட வேண்டும்
பெ: தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே.. திரை போட்டதின்று.. திசை பார்த்து நின்று
: பொன்னள்ளித் தூவும் பூமாலை நேரம்.. கண்ணே நம் காதல் கல்யாணமே
பெ: மாலை வந்தாலே மார் மீதிலாடும்.. மாறாது.. ஆறாது.. நம் காதல் தேரோட்டம்

: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

#264 ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.சுசீலா & குழுவினர்


பெ: ஆடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: மேலோகம் பூலோகம் மாறும்.. மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்.. நாள்தோறும் மோகங்கள்தான்
ஆடும்போது தேகம் தேயும்.. பார்க்கும்போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: நானென்று நீயென்று ஏது.. பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது.. போதைக்கு எல்லை இல்லை
காலை ஏது.. மாலை ஏது.. காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டுப் போகாது.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

#263 பாடு நிலாவே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
...
பெ: பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
உன் பாடலை நான் தேடினேன்.. கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
...

பெ: நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதானபோதும் கைசேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
உன் பாடலை நான் கேட்கிறேன்.. பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
...

: ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கைசேரத் துள்ளும்
ராகங்கள் சேரும்.. தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
பெ: உன் பாடலை நான் கேட்கிறேன்
: பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெ: பாடும் நிலாவே
: தேன் கவிதை
பெ: பூ மலரே..
...

#262 என்னோடு பாட்டுப் பாடுங்கள் - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

: பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்.. பாரியின் தேரிலே முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய்.. ஏன்
பௌர்ணமி.. பௌர்ணமி புன்னகை.. பால்மொழி கன்னிகை
உன் மடி மல்லிகை.. அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு

: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

பெ.குழு: லல்ல லல்ல லலலலா.. லல்லல்லலா..
லல்ல லல்ல லலலலா.. லல்லல்லா..
லல்லா.. லல்லா.. லல்லா..
...

: தேனிலே நாளிலே தாரகைப்பூ.. தேவதை கூந்தலில் சூடவா நான்
சாமரம் வீசிடும் மார்பிலே நான் சாய்நததும் ஓய்ந்ததே சரசமும்.. ஏன்
மௌனமோ.. மௌனமோ உன் மொழி.. நாணமோ தாய்மொழி
எண்ணமோ கண்வழி.. தினம் தினம் தொடத்தொடத் தொடர்கதையோ

: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

:  என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

#261 மானே தேனே கட்டிப்புடி - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளைத் தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி
ஆ.குழு: கட்டிப்புடி
: மாமன் தோளைத் தொட்டுக்கடி
ஆ.குழு: தொட்டுக்கடி
: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

: ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
...
: ஓய்.. ஓய்.. ஓய்.. ஓய்..
...

பெ: நாணல் பூவைப் போல உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
: கோடை மேகம் போல உன்னைத் தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
பெ: கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
: ஆத்தோரம்
ஆ.குழு: காத்தாடுது
: காத்தோடு
ஆ.குழு: பூவாடுது
: பூவோடு
ஆ.குழு: தேன் பாயுது
: தேனோட
ஆ.குழு: தேன் சேருது
பெ: அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

ஆ.குழு: தந்தன தந்தன தந்தா தந்தன.. ஏ.. தந்தன தந்தன தந்தா தந்தன..
ஏ.. தந்தானா தந்தன தந்தன.. ஏ.. தந்தானா தந்தன தந்தன..
...

: அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
ஹொய்.. அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
பெ: காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
: உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
பெ: ஊரோரம்
ஆ.குழு: தோப்பானது
பெ: தோப்போரம்
ஆ.குழு: நீரானது
பெ: நீரோட
ஆ.குழு: நீர் சேருது
பெ: ஆனந்தம்
ஆ.குழு: தான் பாடுது
: கன்னமும் கண்களும் சொன்னது என்னடியோ.. வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி
பெ: ஹா..
: அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
பெ: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மல்லிகை வாசனை
பெ: மந்திரம் போடுது
: மம்முத ராசனின்
பெ: மையலைத் தேடுது
ஆ.குழு: லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
...

#260 தேனே தென்பாண்டி மீனே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு.. நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு.. மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரமின்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம்பூவைத் தூரம் வைத்தால் வாசம் விட்டுப் போகுமா
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

#259 உதய கீதம் பாடுவேன் - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆ.. ஆஆஆஆஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
...
உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்.. ஒலிகளில் பூத்தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

பிள்ளை நாளை பார்க்குமே.. எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே.. அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில்.. தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..

உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

கண்ணே.. தீரும் சோதனை.. இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை.. என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன்.. உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..

உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

#258 சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் - உதய கீதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

பெ: லால லாலலா.. லால லாலலா..
லால லால லால லால லா..
..
: போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே.. ஓஓஓஓஓஓஓஓ..

: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

: உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே.. ஓஓஓஓஓஓஓஓ..

: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே.. ஓஓஓ..
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

#257 தென்றல் வந்து தீண்டும்போது - அவதாரம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அவதாரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி & குழுவினர்

 

பெ.குழு: தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத்தானானா
தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத் தானத் தானத் தானானா
தம்தம் தந்தனதந்தம் தம்தம்.. தம்த தம்தம் தந்தனதந்தம் தம்தம்..
: தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா.. உள்ளத நானுஞ்சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

பெ.குழு: தும்தும்தும்தும்.. தும்தும்தும்தும்..
ஓ ஓஓஓஓஓ.. ஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓ..
ஓ ஓ.. ஓஓ.. ஓ ஓ.. ஓஓ.. ஓஓஓஓ ஓ ஓ
ஓ ஓஓ ஓஓஓ ஓ..
ஆஆஆ ஆஆஆஆ ஆ..
...
பெ: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒ(உ)றவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெ: ஓடை.. நீரோடை.. இந்த ஒ(உ)லகம் அது போல
: ஓடும்.. அது ஓடும்.. இந்தக் காலம் அது போல
பெ: நெ(நி)லையா நில்லாது நினைவில் வரும் நெ(நி)றங்களே

: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
...

பெ.குழு: ம்ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்..
ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்
ம்.. ம்.. ம்ம்..
...
: ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாந்(ம்) துளிர்க்குது
நேசம் பொ(பி)றந்தாலே ஒ(உ)டம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெ: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலைபோலே அழகெல்லாம் கோலம் போடுது
: குயிலே குயிலினமே.. அன்பை எ(இ)சையாக் கூவுதம்மா
பெ: கிளியே கிளியினமே.. அதைக் கதையாய்ப் பேசுதம்மா
: கதையாய்.. விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெ: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
பெ: வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ: உண்மையிலே உள்ளது எண்ணம் என்ன
வண்ணங்கள் என்ன என்ன
: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
பெ: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

#256 சேலை கட்டும் பெண்ணுக்கொரு - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
...
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
...

பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
: ஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெ: ஆனந்தச் சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களைக் கிள்ளுவதால் ரத்தம் வருமா
: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
பெ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
...

: ஓ.. ஓஓஓ ஓஓ.. காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
: மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தைத் தூது விட்டால் வானம் வந்தது
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்..  ihikhikகண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
...

#255 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
























பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...

பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு  ihikhikஇடையை மறந்தது
: என் விழிகள் உனது கண்களைக் கண்டு  ihikhik இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

#254 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்


பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...

பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...

: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
: I love you..
பெ: I love you..
...

#253 மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ - மந்திரப் புன்னகை

என்றும் இளமை பொங்கும், கொஞ்சும் குரல் கொண்ட
எஸ்.ஜானகி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: மந்திரப் புன்னகை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

தேவதைகள் தேரினில் போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம் பார்வையில் பூக்கும்
தேகம் தினம் பாடும்.. பாவமதில் போகும்.. நீ ஓடி வா
வாழ்க்கை என்னும் காவியம்.. காலம் அன்பின் ஆலயம்
வா.. வா.. வா..

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால்
ஏழைகள் கூட ஊர்வலம் போவார்
பூவும் மலர்ந்தாடும்.. நாளும் மணம் வீசும்.. வாழ்வைப் பார்க்கிறோம்
பொம்மலாட்டம் ஆடலாம்.. போரும் செய்து பார்க்கலாம்
என்றும் வாழ்விலே

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..


#252 யமுனா நதிக்கு வந்து - கண்ணே கலைமானே

படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி



பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெ: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ.குழு: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
பெ: காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ: வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
வண்டாக விளையாட வருவாண்டி முன்னே
வாயார முத்தங்கள் பதிப்பாண்டி பெண்ணே
முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ.குழு: முந்தானை முத்தாட.. முத்தோடு கொத்தாட
பெ: குறும்பு செய்வாண்டி சிங்காரக் கண்ணன்
வழியை மறைத்துக் கொண்டு வம்புகள் பண்ணிக் கொண்டு
ஜாடை வார்த்தைகள் சொல்லி அணைப்பான் ஆசை கொண்டு
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
...

பெ: சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
சிசுபால வதம் செய்து பேர் கொண்ட கண்ணன்
சிருங்காரக் கலைதன்னில் ஈடில்லா மன்னன்
இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ.குழு: இவன் பாடல் கேளாது பூவிழிகள் தூங்காது
பெ: ராதைக்கு இவனின்று சுகமிங்கு ஏது
மனதைத் திருடிக் கொண்ட மாயக் கள்ளனடி
மையல் பார்வைகளாலே மயக்கும் கண்ணனடி
பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..

பெ: யமுனா நதிக்கு வந்து.. இரவில் துணைக்கு வந்து
என்னை அணைத்துக் கொண்டான் கோபாலன்
காதல் கண்ணனைத் தேடிக் கண்கள் மயங்குதே
பருவம் மன்மதத் தேரில் பயணம் போகுதே
பெ&பெ.குழு: தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
தனனானானே.. ஹொய்யாரே ஹோய்..
...

#251 நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
...

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன்னாடை.. ஹே.. மிதக்கின்ற பாலாடை
உன் காலை.. ஹே.. குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
...

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில்.. ஹே.. இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள்.. ஹே.. உனைக் கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவறிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்

எந்நாளும்.. நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல்.. ஹே.. வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம்.. ஹே.. அரங்கேறும் கண்ணோரம்
ம்ம்ம் ஹும்ஹும்ஹும் ம்ம்..
ஆஆஆ ஹாஹாஹா.. ஆஆ..
...

#250 பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
...

சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
ஹேஹே.. இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்.. இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...

காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால் ihikhik பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
ஏஹே.. வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. பனி விழும் மலர்வனம்
பனி விழும் மலர்வனம்
...

#249 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ: ஆஆ.. ஆஆ.. ஆஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்.. ஹாஆ..
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
...

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆ ஆஆ..
: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெ: மௌனமே சம்மதம் என்று
: ம்..
பெ: தீண்டுதே மன்மத வண்டு
: ம்..
பெ: மௌனமே சம்மதம் என்று.. தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பெ: பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
...

பெ: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ: ஹா..
: கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஹா..
: பூவிலே மெத்தைகள் தைப்பேன்.. கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்.. ஹா.. ஹா..

பெ: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெ: உன் வார்த்தை சங்கீதங்கள்.. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
&பெ: பொன் மேகம் நம் பந்தல்
...

#248 கொட்டுக்களி கொட்டு நாயனம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
...

பெ: சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது
: கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது
பெ: கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது
: கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது
பெ: ராஜராஜனும் கைகோர்த்த ராணியாகணும்
: காதல் சாகரம்.. அதில் இன்பத் தோணி போகணும்
பெ: ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்

: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
பெ: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே.. பட்டுக் களஞ்சியமே
பெ: தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
...

: முத்துமணி மாலை போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்
பெ: பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்
: காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்
பெ: நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்
: மூட மூடவே என்னோட மோகம் ஏறுது
பெ: பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
: தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது

பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா.. பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே.. முத்துத் திரவியமே
: வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட
பெ: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது.. வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா.. பட்டுக் களஞ்சியமே
: தொட்டுக் குலவிட வா பெண்ணே.. முத்துத் திரவியமே
...

#247 அந்தியில வானம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
: கூடும் காவிரி.. இவதான் என் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..
பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
...

பெ: கட்டுமரத் தோணி போலக் கட்டழகன் உங்க மேல
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவையில்ல.. முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
: பாலூட்டும் சங்கு.. அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
பெ: நாணம் உண்டல்லோ.. அதை நானும் கொண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ.. ஹோ..

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

: வெள்ளியலை தாளந்தட்ட.. சொல்லியொரு மேளங்கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா.. ஆ ஆ ஆ..
மல்லியப்பூ மாலை கட்ட.. மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா.. ஆ.. ஆஆஆ..
பெ: கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்
: தேகம் ரெண்டல்லோ.. இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகமொன்று ஜீவனொன்று கூடும் இன்றல்லோ

பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: கூடும் காவிரி.. இவதான் உன் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..

: அந்தியில வானம்
பெ: ஹா..
: தந்தனத்தோம் போடும்
பெ: ஆஹா..
: அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்
: ஹோய்..
பெ: சுந்தரியப் பாரும்
: ஆஹா..
பெ: சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

#246 கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ.குழு: பாபப பாபப..
: தாதத தாதத..
பெ.குழு: நீநிநி நீநிநி..
: ஸாஸஸ ஸாஸஸ..
பெ.குழு: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
: தப நித ஸாநி ரிஸ ரிகமப
பெ.குழு: தப நித ஸாநி ரிஸ நிதபம பா..
...
: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: அம்பா சாம்பவி சந்த்ரமௌலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவாத்ரிநயனா காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயௌவனா சுபஹரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
...

: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றஞ்சொல்லுமா
பெ: கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ்சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
: வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
பெ: சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது

: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
 கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: பூவே.. பெண் பூவே
இதிலென்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா
...
பெ: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
: உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பமெல்லாமே இருவருக்கும்
பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
: ரெண்டா.. ஏது.. ஒன்றுபட்டபோது

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
: கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி





: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
பெ: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
பெ: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்
: வந்துவிட்டேன்.. மெல்ல மெல்ல
பெ: தந்துவிட்டேன்.. என்ன சொல்ல
: பாவமல்ல.. வேதங்கள் தடையல்ல

: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
பெ: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
பெ: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்
: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெ: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
: கட்டிப் பிடி..
பெ: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா
...
&பெ: காதல்தானே ஜெயிக்குது

: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்.. சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
...

#244 புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா



புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

என்னென்ன தடை வந்தபோதும் காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை மறைப்பதில்லை
காலமின்னும் கூடவில்லை.. மாலையின்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்றபோதும் உன்னை நினைத்திருப்பேன்
தேவனே காத்திருப்பேன்.. தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன்.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ.குழு: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ம்ம் ம்ஹும்..
...
பெ: ஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா

ஆ: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆ. ஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
தனன தீம்த திரனா.. தன திரன.. தனன தீம்த திரனா.. தன திரன..
தனன தீம்த திரனா.. தன திரனா.. தா.. ஆஆஆ ஆ..
...

பெ: முன் வைத்த காலைப் பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா
: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிக்கின்றதா
பெ: அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா
: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெ: ஜீவன் தவிக்கின்றதா.. தேகம் கொதிக்கின்றதா

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆ..
...
: கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
பெ.குழு: ஸதகரி ஸதகரி நிதபம கமகம பதநித ககபம கரிஸத ரிரிஸ கரிமக பா
ரிரிஸ கரிமக பா
பெ: காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
: நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
பெ: காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
: பெண்மை சிலிர்க்கின்றதோ.. பேசத் தவிக்கின்றதோ

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
பெ: ம்ம்ம் ம்ம் ம் ம்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்..
...