#271 பூந்தென்றல் போகும் பாதை - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா


பூந்தென்றல்.. ஆஹஹா.. ஆஹஹா ஆஹஹா..
...
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்..
...

சிறு சிறு மலைகளில் விழுகின்ற அருவிகள் இசையென ஒலிக்கிறது
அது சுரங்களைப் பிரிக்கிறது.. ஸரிகம சுரங்களைப் பிரிக்கிறது
சந்தன மரங்களில் தழுவிய காற்றினில் இலைகளும் அசைகிறது
அது தாளத்தில் இருக்கிறது.. தகதிமி தாளத்தில் இருக்கிறது
பச்சை மலை எங்கும் இந்தப் பாடல் கேட்டு
பஞ்சவர்ணப் பூக்கள் கூட ஆடுதே
இந்த இயற்கை அன்னை சீதனம்.. அது இசையால் ஆனது
இதை யாரும் இங்கு கேட்கலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
...

ஆஆ.. ஆஆஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஹா..
ஆஆ.. ஆஆஆஆஆஆ ஆஆ..
கனி விட்ட மரங்களில் இளஞ்சிட்டுக் குருவிகள் கூடுகள் புனைகிறது
ஒரு குடும்பமும் வளர்கிறது.. பல பல சுகங்களும் மலர்கிறது
இயற்கையின் அழகினில் இளமையும் இனிமையும் இணைவது ஓரழகு
அதில் இணைந்தது என் மனது.. தினம் தினம் விளைந்தது புது உறவு
வானவில்லின் ஜாலம் கண்டு மோகம் கூடும்
எண்ணமெங்கும் ஜாடை சொல்லிப் பாடுமே
இங்கு கொஞ்சும் இன்பமாயிரம்.. மனம் போலே ஆடலாம்
தினம் சொர்க்கம் இங்கு காணலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்.. ஹேஏ ஏஏ ஏஏ ஏஏ ஏ..
...

#270 காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: குயில் கூவத் துயில் பறந்து குயிலொன்று எழுந்து வந்து
பயிலாத பாடமொன்றை பயிலச் சொல்லிச் சென்றதம்மா
வயதாக வயதாக இது படியாது.. பயிலாது
கயல் கொண்ட விழியாளே.. இங்கு இயலோடு இசையாக..
காலங்காத்தாலே ஒரு பாடங்கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: என்ன பாடம்.. அது என்ன பாடம்
: காதல் பாடம்.. அது காதல் பாடம்
பெ: ஓஹோஹோஹோ.. காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: எப்போ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஓஹோஹோஹோ..
...

பெ: தாவணியைப் போட்டால் போதும்.. கனவுகள்தான் பின்னால் சுற்றும்
தனியாகப் போனால் போதும்.. நினைவுகள்தான் தன்னால் சுற்றும்
பேசாமல் இருக்கும் நிலவைப் பெண்ணுக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபந்தான்.. வேலையைப் பார்.. சீக்கிரம் சீக்கிரம்

பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: ஓஹோஹோஹோ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஆஹாஹாஹா
...

&பெ: லாலலாலலாலா.. லாலலாலலா.. லாலலாலலாலா.. லாலலாலலா..
லாலலாலா.. லாலலாலா.. லாலலாலலா..
...

: வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் பாடும் பாடல் போலேதான் ஆகும் ஆகும்
தனியாகச் சொல்லும் பாடம்.. இதுதானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்.. அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபந்தான்.. சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி

: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
: காதல் பாடம்.. சொல் காதல் பாடம்
பெ: ம்ஹும் ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும் ம்ஹும்..
...

#269 எம்மனசப் பறிகொடுத்து - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்


எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
...
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து..
...

சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே ஒரு கோடி இன்பம் வைத்தான்
அழகே.. அருகே வரலாமா
அட வந்தால் என்ன பக்கம்.. இனிமேலும் என்ன வெட்கம்
உன் கூந்தல்தன்னில் ஊஞ்சல் கட்டிச் சாய்ந்தாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ
மலரோடு தென்றல் வந்து விளையாடிச் செல்லும்போது
மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா
இளமை இனிமை சுவைத்தேனே.. இனிமேல் தினமும் சுகம்தானே
கதை சொல்வேனடி மானே.. உனைக் கொண்டாடுவேன் நானே
நீ சொல்லித் தந்த பாடமெல்லாம் நான் பாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

#268 தேனே.. செந்தேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ம்ஹுஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹு..
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

ஆசையில் ஆடினேன்.. துணை தேடினேன் என் வாழ்விலே.. ஹோய்
ஆனந்தம் பாடினேன்.. மலர் சூடினேன்.. பொன் மாலையில்
ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை ஊடல் நாடகம்
அழகிலே தோன்றும் வண்ணக் காதல் காவியம்
தேவி உன் கோவில் தேடி தீபம் ஏற்றினேன்
பூஜை காணவே..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

வானவில் ஊஞ்சலில் இளஞ்ஜோடிகள் பண்பாடுது.. ஹா..
மௌனமே ராகமாய்.. சுகம் கோடியே கொண்டாடுது
வாசனை மோகம் தந்த தேகம் போதை ஊட்டுது
பூச்சரம் போலே வந்த வேகம் எல்லை மீறுது
ராணி எந்தன் காதல் ராணி.. ihikhik பட்டம் சூட்டவா
என்னை ஆள வா..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...