#293 மழையின் துளியில் - சின்னத்தம்பி பெரியதம்பி

படம்: சின்னத்தம்பி பெரியதம்பி
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா


மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...

ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

#291 தாஜ்மஹால் தேவையில்லை - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

#290 காதல் கசக்குதய்யா - ஆண்பாவம்


என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros - See more at: http://isaiamudham.blogspot.com/2013/06/257.html#sthash.71W6SxoW.dpuf
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros - See more at: http://isaiamudham.blogspot.com/2013/06/257.html#sthash.71W6SxoW.dpuf
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆண்பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா



காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
...

யாராரோ காதலிச்சு.. யாராரோ காதலிச்சு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல
காதலைப் படமெடுத்தா ஓடுமுங்க.. தியேட்டரிலே சனம் கூடுமுங்க
தேவதாஸ்.. அவன் பார்வதி.. அம்பிகாபதி.. அமராவதி
கதையக் கேளு.. முடிவப் பாரு..
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா..
...

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு கேட்டாச்சு
இத்தனையும் பார்த்து இத்தனையும் கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல.. காயாத கானகத்தே
பி.யு.சின்னப்பா வந்த காலத்துல.. காதல் கனிரசமே
மன்மத லீலை எம்.கே.டி. காலத்துல
நடையா இது நடையா.. நம்ம நடிகர் திலகம் பாணியில
ஹலோ.. ஹலோ.. சுகமா.. அட.. ஆமா நீங்க நலமா
எங்கேயுந்தான் கேட்டோம் அண்ணன் எம்.ஜி.ஆர் பாட்டுக்கள
இந்தக் கால இளைஞன் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதைப் பாடுங்க.. பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்சை.. தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது

எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல்.. மோதல் சாதல்.. காதல் காதல்..
கசக்குதய்யா.. கசக்குதய்யா.. கசக்குதய்யா..
...

#289 புன்னகையில் மின்சாரம் - பரதன்

படம்: பரதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



: புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: அஹா.. அஹா.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

: மந்திரத்தை நான் பாட.. அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான்.. மிகப் பக்கந்தான்
பெ: முத்தளந்து நான் போட.. முக்கனியை நீ தேட
மெள்ளத்தான் இடை துள்ளத்தான்
: வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெ: செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
: இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான்
பெ: இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான்
ஜிகுஜிகு ஜம்ஜம்..

: தரத்தத்த.. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: ஹ.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

பெ: சொல்லியது மாளாது.. சொல்லிச் சொல்லித் தீராது
நித்தந்தான் ஒரு பித்தந்தான்
: பொற்கலசம் ஏராட.. பைங்கொடியும் போராட
அம்மம்மா.. துயர் என்னம்மா
பெ: வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு
: ஹா.. பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே
நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெ: சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத் தேன் பாட்டுக் கேட்கத்தான்
: சுகம் அள்ளித் தர வந்தாளே கண்ணே.. என் கண்ணம்மா.. ஜிகுஜிகு ஜம்ஜம்..

பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தரததத்தத்தத்த.. தத்தத்தத்த..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தததுதுத்து தத்தத்துதுத்து..
தாதத்தத்தத் தகுததா.. தகுதத்தத்தத் தகுததத்தத்த..
தத்தத் தகுதத்தா.. தகதுகுதகு தத்தத்ததத்தது.. தகதுகுதகு.. தா..

#288 ஒரு நாள் ஒரு பொழுது - அந்தி மந்தாரை

படம்: அந்தி மந்தாரை
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஸ்வர்ணலதா


 

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம.. உசுரு அல்லாடுதே
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஒடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

#287 செம்பூவே பூவே உன் மேகம் நான் - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: இமைகளும் உதடுகளாகுமோ..
பெ: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

: அந்திச் சூரியனும் குன்றில் சாய.. மேகம் வந்து கச்சையாகக்
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெ: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
பெ: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெ: கட்டிலும் கால் வலி கொள்ளாதோ.. கைவளை கைவளை கீறியதோ

: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

பெ: இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
: அந்தக் காமனம்பு என்னைச் சுட்டு.. பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்.. சேலைப் பொன் பூவே
பெ: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெ: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
: பாயாகும் மடி.. சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே

பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: இமைகளும் உதடுகளாகுமோ..
: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

#286 ஆலோலம்கிளி தோப்பிலே - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



பெ.குழு: ஹே.. ஹேலலா லாலா லாலலா..
லாலாலா லாலாலா.. லாலாலா லாலாலா..
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

: கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ.. ஹோய்..
பெ: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ.. ஓ..
: காதல் விழாக்காலம் கைகளில் வா வா.. ஈர நிலாப் பெண்ணே
பெ: தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல்.. ஆடி வா
: வீணை புது வீணை.. சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

பெ: கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ.. ஓ..
: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ.. ஹோய்..
பெ: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
: நிலாவின் பிள்ளையிங்கு நீதானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ
பெ: ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா.. புதுக் காதல் குறுந்தொகையா

: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்குமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

#285 மன்னன் கூரைச்சேலை - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா


 

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல்தானோ.. இனி பூமழையும் கொஞ்சுந்தேனோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

பெ.குழு: தனன தீரனன தானன தானா.. தனன தீரனன தானன தானா..
தனன திரனனனன.. தனதிரனா.. தா.. திரனனன நா நா..
...
பெ: செந்துரப் பொட்டிட்டேன்.. ஒளிப் பொன்வளை கையிலணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை
சாமத்தில் பூஜைக்கு உயிர்த் திரியில் விளக்கு கொளுத்தி
நான் வைப்பேன் என் மன்னன் பேரைச் சொல்லி
பிள்ளைச் செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நித்தம் பள்ளிப் பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நாளும் பொழுதும் உள்ளமிளைத்தேன் என்னைத் தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளித் தூவும் முன்பே நீ
வள்ளல் போல் கண்ணா வா

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

: ஏ.. ஹேஹேஹேஹே.. தேனெடுத்து வச்சிருக்கும் தேனீ
ஆ.குழு: ஓஹோ..
: மறு பெளர்ணமிக்குள் தேன் குடிக்கும் பார் நீ
ஆ.குழு: ஓஹோ..
: அடி குயில்கள் பாடும் நாள் வந்தா..
ஆ.குழு: அடி குலவைச் சத்தம் கேட்காதா
: உன் தவிக்கும் துயரம் தீர்க்கதான்
ஆ.குழு: அவன் காலடிச் சத்தம் கேட்காதா
...

பெ: பட்டாடை மேலெல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு
நாள்தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்க்கையில் தாவணி வீசி
இனி நாள்தோறும் தாலாட்டும் தாயும் நான்தான்
தீயில் தீரும் மோகங்கள்.. நீரில் தீரா தாகங்கள்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்திடுமா
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வுங் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே மெத்தையிடும் நாள்தான் தாகங்கள் பூச்சுடும்

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
...

#284 சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எம்.ஜி.ஶ்ரீகுமார் & சித்ரா


 

: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
ஆ.குழு: சித்திரப் பூவே.. பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா
: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
...

பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ.. ஓஓஓ..
ஓஓஓ.. ஓஓஓ..
...
: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெ: மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்
: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெ: மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்
: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
பெ: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
: என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே.. பிரியமே.. சகி....

பெ: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
பெ: சுட்டும் சுடர்விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா
: தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே
...

பெ.குழு: ஓ.. ஓஓ ஓ.. ஓ.. ஓஹொஹோ.. ஓ.. ஹொஹொஹோ..
ஓஹொஹோ.. ஓஹொஹோ.. ஓ..
...
பெ: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
பெ: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
பெ: விண்ணுலகம் எரியுதே.. பெளர்ணமி தாங்குமா
: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ
பெ: கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
...

#283 தம்தன நம்தன தாளம் வரும் - புதிய வார்ப்புகள்

படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: ஜென்சி, வசந்தா & குழுவினர்

பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
பெ1: தம்தன நம்தன தாளம் வரும்.. புது ராகம் வரும்.. பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ2: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ1: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ1: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ1: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ1: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனனேனனேனனேனனே..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
...

பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெ2: பெண் மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...

பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
ஆ..
...
பெ2: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ1: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
பெ2: சிந்திய பூ மலர் சிந்திவிழ.. அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்த்தது சந்திரனோ.. சந்திரன் போலொரு இந்திரனோ
பெ1: முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர.. சுவை பெற

பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ1: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது
பெ2: தம்தன நம்தன
பெ1&பெ2: தாளம் வரும்
பெ2: புது
பெ1&பெ2: ராகம் வரும்
பெ2: பல
பெ1&பெ2: பாவம் வரும்
பெ2: அதில்
பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
...

#282 பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
...
பெ.குழு: ராரா ராரா ரா.. ராரா.. ராரா ரா..
ராரா ராரா ரா.. ராரா ராரரா..
...

: மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே
பெ: ஆலம் விழுதோடு கிளிக் கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசை பாடித் திரியும் நேரம் இதுவல்லவா
: ஏதேதோ எண்ணம் தோன்ற.. ஏகாந்தம் இங்கே
பெ: நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே
: வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
பெ: ஆசைகள் ஈடேறக் கூடும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

பெ: ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடுதான்
தேவி ஶ்ரீதேவி பூவாரம் சூட.. தேவன் என்னோடுதான்
: நீல வான் கூட நிறம் மாறிப் போகும்.. நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன.. காதல் தடம் மாறுமா
பெ: ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம்
: ராஜாவின்.. ihikhik முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம்
பெ: வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
: ஆனந்த எல்லைகள் காட்டும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

#281 தத்தோம் தளாங்கு தத்தோம் - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
...
&பெ: ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
...

: இரவில் உன்னோடு நர்த்தனம்தான்.. இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்.. இதழ்கள் கொண்டாடும் முத்தம்
பெ: சுதந்திரம் தினம் தினந்தான்.. நிரந்தரம் சுகம் சுகந்தான்
நலம் பெறும் மனம் மனந்தான்.. வலம் வரும் நகர்வலந்தான்
: இணையத்தான் இணையத்தான்.. அணையத்தான் அணையத்தான்
பெ: ஒரு அத்தான் ஒரு அத்தான்.. உருகத்தான் உருகத்தான்
: திசையெட்டும் இசையெட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய் ஹோய் ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்..
...
பெ.குழு: துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது..
துத்தூ.. துத்தூ.. துத்தூ.. துத்தூ..
...

பெ: கழுவும் தண்ணீரில் நழுவிடுமே வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே நடைகள் கொண்டாடும் மான்கள்
: சிறையினில் பறவைகள்தான் சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலும்தான்.. பறந்திடும் இருப்பிடம்தான்
பெ: இதயத்தின் துணிவைத்தான் குடி வைக்கும்.. குடி வைக்கும்
: எதிரிக்கும் புதிரிக்கும்.. வெடி வைக்கும்.. வெடி வைக்கும்
&பெ: திசையெட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

: தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: ஹா..
: பட்டும் படாமல் பட்டோம்
பெ: ஹா..
: மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
பெ: ஹோய்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
: ஹெய்..
பெ: தொட்டும் தொடாமல் தொட்டோம்
: ஹா..
பெ: கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தத்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: தத்தத்..
: பட்டும் படாமல் பட்டோம்..
பெ: தத்தத்..
...

#280 மாருகோ மாருகோ மாருகயி - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ2: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ2: காசுகோ         பெ1: காசுகோ
பெ2: பூசுகோ           பெ1: பூசுகோ
பெ2: மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
ஆ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
...

: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
பெ1: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா.. ஹோய் ஹோய்
: ம்.. சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா
பெ1: ஹேய் கும்மா கும்மா அடியம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா
: ஆசையாகப் பேசினால் போதாதம்மோய்
தாகத்தோடு மோகம் இன்னும் போகாதம்மா
பெ1: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் இன்னும் போகாதய்யா
: ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் வாடுது வெப்பமோ ஏறுது

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: குலு குலு
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: குலு குலு
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
பெ1: மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
&பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

பெ.குழு: குலுலூ.. குலுலூ.. குலுலூ.. குலுலூ..
குலுகுலுகுலு.. குலுகுலுகுலு.. குலுகுலுகுலு.. குலுகுலுகுலு..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
ஹே.. ஹேஹேஹே ஹேஹேஹே ஹே..
...

பெ1: நான் சின்னப் பொண்ணு செவ்வாழைக் கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு
: என் செந்தாமரை கை சேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
பெ1: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாகக் காதைக் கடி
: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டுபிடி
பெ1: கேட்குது கேட்குது ஏதோ ஒண்ணு
பார்த்துப் பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
: ஆஹ்.. தாக்குது தாக்குது ஊதக் காத்து
தள்ளித் தள்ளி நிக்கிற ஆளைப் பார்த்து
பெ1: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையைத் தீர்த்துக்கோ

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: ஜிக்கிஜக்கா
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: ஜிக்கிஜக்கா
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
&பெ1: மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
...

#279 சீவி சிணுக்கெடுத்துப் பூவ - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி


: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

#278 வானமென்ன கீழிருக்கு - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்

ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆ1: தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
...
பெ.குழு: தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
...

ஆ2: காலை மாலை ராத்திரி
ஆ1: தாதாதுதுது..
ஆ2: கட்டில் மீது பாய் விரி
ஆ1: தாதாது..
ஆ2: காமரூப சுந்தரி
ஆ1: ராபாருதுது..
ஆ2: கோடிக் கோடி சங்கதி
ஆ1: ருஜுஜு.. வாடா நண்பனே.. வேளை நல்ல வேளைதான்
வேளை வந்தபின் வேறு என்ன வேலைதான்
ஆ2: மாலை மல்லிகைதான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: சோலை வண்டினம்தான்
ஆ1: பாடாதோ
ஆ2: மஞ்சள் தந்திரந்தான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: மோக மந்திரந்தான்
ஆ1: கூறாதோ.. நேரம் காலம்
ஆ2: ரொம்ப ரொம்ப சாதகம்
ஆ1: ஆ.. சேரும் இங்கே
ஆ2: சின்னப் பெண்ணின் ஜாதகம்
ஆ1&ஆ2: வா வா.. காதல் பாட்டெடுக்க

ஆ2: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ.. ஆட்டமும் பாட்டமும்.
ஆ1: ஹா..
ஆ2: ஹேய் நைனா.. ஓட்டமும் துள்ளலும்
ஆ1: ஹா..
ஆ2: ஹோய் ஹோய்னா.. ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: விஜேபுஜாபுஜூ.. விஜேபுஜாபுஜூ..
...

ஆ1: தீயைப் போலக் காயுது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: தணலைப் போலக் கொதிக்குது
ஆ2: தாதாதா..
ஆ1: அம்பு ஒண்ணு பட்டது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: ஆதி அந்தம் சுட்டது
ஆ2: தாதாதா.. ஏதோ ஞாபகம்.. மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம் றெக்கை கட்டி ஓடுது
ஆ1: ஆஹா நூலிடைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: ஆளைக் கொல்லுதப்பா
ஆ2: அம்மாடி
ஆ1: நீலத் தாமரைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆ2: ஆத்தாடி.. வாடா ராஜா..
ஆ1: வாலிபத்தைக் காட்டு நீ
ஆ2: ஆ.. வீணை இங்கே
ஆ1: கையெடுத்து மீட்டு நீ
ஆ1&ஆ2: ஆ.. வா வா.. காதல் பாட்டெடுக்க.. வானமென்ன

ஆ1: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1&ஆ2: வானமென்ன
ஆ2: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: விஜாபுஜேபுஜூ.. விஜாபுஜேபுஜூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: ததாதாவ்டூ
ஆ1: ஹா,,
ஆ2: ததாதாவ்டூ..
...

#277 ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...
பெ.குழு: தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாத்ததத்தா தத்தா தத்தா.. தாத்ததத்தா தத்தா தத்தா.. ஹோ..
...

: கொத்துக் கொத்துப் பூவாக முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்.. அள்ளி அள்ளிச் சேர்த்தேன்
பெ: ஒட்டி ஒட்டி உறவாட.. கட்டிக் கட்டிக் கலந்தாட
முத்தமென்னும் பூந்தேன் கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன்
: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
பெ: ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா.. கண்ணா.. சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம்

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ: லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
...
பெ.குழு: ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
...

பெ: கங்கைக் கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ.. கையில் எடுப்பானோ
: வெள்ளியலை மேடையிலே மங்கை நீராடையிலே
உள்ளங் கொதிக்குதடி.. அள்ளத் துடிக்குதடி
பெ: அம்மாடியோ பார்வையும் அம்பானது
பொன்மானுக்கும் ஆசை உண்டாகுது
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
: அந்த உச்சிமலை மேலே ஒரு வெள்ளிப்பனி மாடம்
அடி ராதே.. ராதே.. நாளும் அங்கொரு காதல் கும்மாளம்

பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...

#276 அடி நாம்புடிச்ச கிளியே - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பெ.குழு: ஏஹே.. ஏஏ ஏஹே.. ஏஏ ஏஹே..
தந்தானத் தான தந்தானத் தான தந்தானத் தந்தானத் தானனா..
: அடி நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...

: கட்டுக் கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி
ஆனாலுந்தான் கெட்ட வழி போனதில்லை நானடி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி
என்னைப் பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒண்ணே வாழ்க்கையா.. பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்

: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...

: ஊருக்குள்ள நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர் வரிசை கேட்கவில்லை நானடி
ஆசப்பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி.. மாமன் தோளை சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்

: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...